திண்டிவனம் : திண்டிவனத்தில் கொரோனா நோயாளியை சாலையில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் சேடன்குட்டை தெரு ஜேபி நகரை சேர்ந்தவர் சிற்றரசு (50). இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வீட்டிற்கு அழைத்துச்செல்லாமல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டின் தெருமுனையில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.