இந்தியா உத்திரபிரதேச பாஜக தலைவர்களிடையே வலுக்கும் பனிப்போர்?: குஜராத் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியை துணை முதல்வராக்க திட்டம்? Jun 07, 2021 பனிப்போர் உத்திரப்பிரதேசம் பாஜக குஜராத் ஐஏஎஸ் லக்னோ: உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் - பாஜக தேசிய தலைமை இடையிலான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. உத்திரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளர்களுடன் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் - பாஜக தேசிய தலைமை இடையிலான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிக்காததை அடுத்து இந்த விவகாரம் விவாத பொருளானது.உத்திரதேசத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் குஜராத்தில் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் குமாருக்கு பாஜக தேசிய தலைமை அதிக முக்கியத்துவம் குடுக்க தொடங்கி இருப்பது யோகி ஆதித்யநாத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரவிந்த் குமார் உத்திரபிரதேச மேலவை உறுப்பினராக்கப்பட்டுள்ள நிலையில் அவர் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலர் உத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். உத்திரபிரதேச தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மாநில ஆளுநர் ஆனந்தி பென்ணையும் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக தேசிய தலைமை காய் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் உத்திரபிரதேச மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோரின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சின்னங்களை சேமிப்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு
திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 6 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்