அமிர்தசரஸ்: ‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ நினைவு தினத்தை முன்னிட்டு பொற்கோயிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நாடாக அறிவிக்கும்படி காலிஸ்தான் அமைப்பு தீவிரவாதிகள் போராடினர். இதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு ஒடுக்கியது. பாதுகாப்பு படையுடன் நடந்த சண்டையின் போது, அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கினர். அவர்கள் மீது, ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. பொற்ேகாயிலுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. பொற்கோயிலில் எடுக்கப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையை பஞ்சாப் அமைப்புகள், சில கட்சிகளும் ஆண்டுதோறும் சோக தினமாக அனுசரித்து வருகின்றன. 1984ம் ஆண்டு, ஜூன் மாதம் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின் 37ம் ஆண்டு நினைவு தினம் பஞ்சாபில் நேற்று அனுசரிக்கப்பட்டது.