புதுடெல்லி: ‘கணக்கு தொடங்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு அதை பயன்படுத்தவில்லை என்றால், அந்த கணக்கு முடக்கப்படும்,’ என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தகவல்களை தொடர்ந்து பாதுகாக்கவும், பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்காகவும் புதிய செயல்பாடுகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை அது கொண்டு வந்துள்ளது, இந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கணக்கு தொடங்கப்பட்ட பிறகு பயனாளர்கள் அதை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால், 2 நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் கணக்கை நீக்குவதற்கு வாட்ஸ்அப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்த கணக்கில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிக்கப்படும். அதே நேரம், பயனாளர்கள் ‘பேக் அப்’ வசதியை பயன்படுத்தி, அதே எண்ணில் மீண்டும் வாட்ஸ்அப் வசதியை பதிவு செய்தும் அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறலாம்.