புதுடெல்லி: ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி டோஸ் தடுப்பூசியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு செய்துள்ளது. நாட்டில் தற்போது பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள், மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது, ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, ரஷ்யாவில் இருந்து அது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்- இ நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவாக்சினை தொடர்ந்து உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2வது தடுப்பூசியான இது, விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தின் முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன.