ஜம்மு: சர்வதேச எல்லையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த ஜேசிபி இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, இருதரப்பு ராணுவமும் தாக்குதல் நடத்தக் கூடாது. ஆனால், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக இதை மீறி எல்லையில் ராணுவம் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது. இருநாட்டு உறுவை மேம்படுத்தும் முயற்சியாக, இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றுவதாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. இதற்காக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே ஒப்பந்தமும் கையெழுத்திட்டது.