சென்னை: இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி குறைப்போ அல்லது விலக்கோ கோவிட் சம்பந்தப்பட்ட மெடிக்கல் எக்ப்யூமெண்ட்டுக்கு கொடுப்பதற்காக 8 மாநிலத்தை சேர்ந்த ஒரு குழு அமைத்துள்ளனர். இது, மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்திய கூட்டமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் இந்த குழுவில் எட்டு மாநிலத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதாவது மேகாலாயா, குஜராத், மகாரஷ்டிரா, கோவா, ஒடிசா, கேரளா, தெலுங்கானா, உத்திரபிரசேதம் ஆகும். இந்த பிரச்சனையை ஜிஎஸ்டி கவுன்சிலில் எழுப்பியது தமிழகத்தின் நிதியமைச்சர். நிறைய பேருக்கு சம்பளம் இல்லை, வருமானம் இல்லை, பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் அவர்கள் செலவை குறைப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும்: இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பு வேண்டுகோள்
- தமிழ்
- தமிழ்நாடு
- நிதி அமைச்சர்
- பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
- மத்திய நிதி அமைச்சு
- இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு