திருவனந்தபுரம்: ‘கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,’ என்று தமிழ்நாடு உள்பட 11 பாஜ அல்லாத இதர மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முறையாக தடுப்பூசிகளை விநியோகம் செய்ய மறுத்து வருகிறது. மாநிலங்கள் சொந்தமாகவே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்கள் சொந்தமாகவே தடுப்பூசியை வாங்க சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா உள்பட பாஜ அல்லாத இதர 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: