கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரம் ஊராட்சியில் போலி மருத்துவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆத்தூர் தாசில்தாருக்கு புகார் வந்தது. இதையடுத்து தாசில்தார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கொரோனா பாதித்த பெண் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நடத்தி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன்(65) என்பதுதெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.