சென்னை: செனாய்நகர், புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன என்று விளக்கம் கேட்டு பள்ளி தாளாளருக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் அனுப்பிய கடிதத்தில்: செனாய்நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.