டெல்லி: ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரெம்டெசிவிர் மருந்தின் தினசரி உற்பத்தி 33,000 குப்பிகளாக இருந்தது, தற்போது 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் ரெம்டெசிவிர் மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.