நெய்வேலி: நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணத்தால் 50 சதவீதம் தொழிலாளர்களை மட்டுமே பணியில் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பணியை புறக்கணித்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளிகள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெய்வேலி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் என்எல்சி தொழிலாளர்கள் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
ஆனால் என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்களை என்எல்சி நிர்வாகம் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கூறியுள்ளது.