திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அலிபிரி நடைபாதை ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும், பாதயாத்திரை செல்லும் பாதையான அலிபிரி நடைபாதையில், பல இடங்களில் உள்ள மேற்கூரை பழுதடைந்துள்ளது. இதனை சீரமைத்து புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை பாதயாத்திரை பாதை மூடப்படுகிறது.