புதுடெல்லி: புதிய சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிபிஐ இயக்குநராக பதவி வகித்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3ம் தேதி பணி நிறைவு செய்தார். அதன் பின் , புதிய இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இப்பதவிக்கான அதிகாரியை தேர்வு செய்ய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த 24ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.