புதிய சிபிஐ இயக்குநர் ஜெய்ஸ்வால் பதவியேற்பு

புதுடெல்லி: புதிய சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிபிஐ இயக்குநராக பதவி வகித்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3ம் தேதி பணி நிறைவு செய்தார். அதன் பின் , புதிய இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இப்பதவிக்கான அதிகாரியை தேர்வு செய்ய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த 24ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

இதில், மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபியும், சிஐஎஸ்எப் தலைவருமான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் உட்பட 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை மத்திய அரசு நேற்று தேர்வு செய்தது. அவர் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

Related Stories: