கெங்கவல்லி : வீரகனூர் பேரூராட்சியில் மயானத்துக்கு செல்ல, சுவேத நதியில் மண்கொட்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரகனூர் பேரூராட்சி 1 மற்றும் 2வது வார்டுகளில் கொரோனா தொற்று, இயற்கை மரணத்தால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்காக ஸ்வேத நதியை கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. மயானத்திற்கு போதிய பாதை வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவது குறித்து தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.