புதுடெல்லி: ‘இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’இறுதிப்போட்டியில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா தான் முன்னிலை வகிப்பார்’ என்று முன்னாள் வேகம் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர், ‘இறுதிப்போட்டியில் பும்ரா, ஷமியை விட இஷாந்த்தான் சிறப்பாக விளையாடுவார். அவருக்கு இங்கிலாந்து களங்களில் 3 தொடர்களில் ஆடிய அனுபவம் இருக்கிறது. கூடவே அங்கு சிறப்பாகவும் ஆடியுள்ளார். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அந்த அனுபவம் பயனளிக்கும்.