சென்னை தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்கு சன் டைரக்ட் டி.டி.எச் உதவி!: அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது..!! May 24, 2021 தமிழ் அரசு அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை: தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சன் டைரக்ட் டி.டி.எச் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் மிக உக்கிரமாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் செய்வதறியாது திகைத்து கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று சாமானியர் முதல் தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி வருகின்றனர். அதன்படி சன் டி.வி. குழும தலைவர் கலாநிதிமாறன் ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கினார். இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சன் டி.வி. குழுமத்தின் ஒரு அங்கமான சன் டைரக்ட் டி.டி.எச் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள்தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், சன் டைரக்ட் டி.டி.எச் மேலாண்மை இயக்குனர் சுவாமிநாதன் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நேரில் அளித்தார்.
சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்
நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்: 2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்
அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை