பெரியகுளம் : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தினமும் 700 முதல் 800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில், வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வருபவர்கள் இ-பதிவு மற்றும் இ-சான்று உள்ளிட்டவைகளை வைத்துள்ளனரா என்பதை சரிபார்க்கவும், வாகனங்களில் வருபவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யவும் கொரோனா தடுப்பு பரிசோதனை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.