அசாமில் விரைவில் பசு பாதுகாப்பு சட்டம்: ஆளுநர் தகவல்

கவுகாத்தி: அசாமில் அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பசு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும் என அம்மாநில ஆளுநர் ஜகதீஷ் முகி கூறியுள்ளார். அசாமில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. புதிய அரசின் கீழ் 15வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் ஜகதீஷ் முகி தொடக்க  உரையாற்றினார்.  அவர் கூறுகையில், ‘‘அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் பசு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர பாஜ அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்திற்கு வெளியே கால்நடைகள் ஏற்றுமதி முற்றிலும் தடை செய்யப்படும். பசு பாதுகாப்பில்  இந்த அரசு எதையும் சகித்துக் கொள்ளாது. நமது ஆரோக்கியத்துக்கு தேவையான பாலை பசுக்கள் தருகின்றன’’ என்றார்.

Related Stories: