இந்தியா பாலியல் பலாத்கார வழக்கில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிப்பு!: 8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு..!! May 21, 2021 தெஹல்கா பரம் தேஜ்பால் கோவா: இளம்பெண் தொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் தெஹல்கா பத்திரிகையில் முன்னாள் முதன்மை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பாலை நிரபராதி என கூறி கோவா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக கோவாவில் உள்ள மாவட்டம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கஷாமா ஜோஷி, தருணை நிரபராதி என கூறி வழக்கில் இருந்து விடுதலை செய்தார். கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவருக்கு கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் லிஃப்டில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்பது தருண் தேஜ்பால் மீதான வழக்காகும். அவர் மீது கோவா போலீசார் பலாத்காரம் செய்தல், அதிகாரத்தை பயன்படுத்தி பலாத்காரம் செய்ய முனைதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் மே 2014ல் ஜாமினில் வெளியே வந்த தேஜ்பால், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்திருந்தார். ஆனால் அந்த மனுக்களை இரு நீதிமன்றங்களும் தள்ளுபடி செய்தன. கோவா மாவட்ட நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேஜ்பால் நிரபராதி என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தேஜ்பால், நீதியின் பக்கம் நீதிமன்றம் நின்றதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு போலி ராணுவ ஆயுத பேரம் ஊழலில் அப்போதைய பாரதிய ஜனதா தலைவர் பங்காரு லட்சுமணன் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை வெளியுலகிற்கு கொண்டு வந்த பத்திரிகையில் தருண் தேஜ்பால் ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை
மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு
மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு
மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு