இந்தியா கர்நாடகத்தில் ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட கோயில் திருவிழா!: ஒட்டுமொத்த கிராமத்தையும் சீல் வைத்த அதிகாரிகள்..!! May 21, 2021 கோயில் திருவிழா கர்நாடக பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட திருவிழாவால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கிராமத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ள பனஹட்டி கிராமத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டதை அந்த பகுதி மக்கள் விமர்சியாக கொண்டாடினர். வீதிகளில் திரண்ட அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மறந்து ஊர் எல்லையில் திரண்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர். வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள், கோயில் திருவிழாவை காரணம் காட்டி வீதிகளில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்தது. விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தும் வகையில் சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!