இந்தியா புதுவகை உருமாறிய கொரோனா தொற்றால் சிங்கப்பூருக்கான விமான சேவையை ரத்து செய்க!: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!! May 19, 2021 தில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் கொரோனா தொற்றுநோய் டெல்லி: புதுவகை உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூருக்கான விமான சேவையை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார். சுற்றுலாவுக்கு பெயர் போன சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 61 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 500க்கும் குறைவானோரே சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா குழந்தைகளை அதிகம் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளை மூடி சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் புதுவகை உருமாறிய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கான விமான சேவையை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிங்கப்பூரில் பரவும் புதுவகையான உருமாறிய கொரோனா தொற்று குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்று ஏதும் சிங்கப்பூரில் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு ஹைகமிஷன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள பி1 6172 வகை உருமாறிய தொற்றே பல்வேறு சோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும் சிங்கப்பூர் ஹைகமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!