சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனிரத்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 30 நாட்களாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன. 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். மணல், கருங்கல் ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் சுமார் 75 ஆயிரம் லாரிகள் இயங்காத காரணத்தினால் அதன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள், கருங்கல், ஜல்லி குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 5 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.