முக்கிய செய்தி இந்தியா மருத்துவ தகுதி கொண்ட மத்திய அரசு ஊழியர்கள் மருத்துவ பணி செய்ய மத்திய அரசு ஒப்புதல்: நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு May 13, 2021 சுகாதார அமைச்சகம் டெல்லி: மருத்துவ தகுதி கொண்ட மத்திய அரசு ஊழியர்களும் மருத்துவ பணி அல்லது நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலமான மருத்துவ ஆலோசனை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த அனுமதி உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வரலாறு காணாத கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் அரசில் கிடைக்கும் உள்திறன்களை பயன்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டியதை கருத்தில் கொண்டு, எந்த வகையிலான மருத்துவ தகுதியை கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்களும் மருத்துவ பணி செய்யவோ அல்லது ஆன்லைன் ஆலோசனைகள் (டெலிகன்சல்டேசன்ஸ்) வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக மேற்படி ஊழியர்கள் தங்கள் துறைத்தலைவர்களின் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ பணி அல்லது மருத்துவ ஆலோசனைகளை தங்கள் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும், அதுவும் முற்றிலும் தொண்டு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு