லக்னோ: கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பவர், பசு மாட்டின் சிறுநீரை குடித்து வருகிறார். கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக தொற்றில் இருந்து தப்பிக்க புதுபுது ஐடியாக்களை அளித்து வருகின்றனர். இதுபோன்ற சில மருத்துவ முறைகளை கூறுவோரை போலீசார் கைது செய்தும் உள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், ‘பசுவின் சிறுநீரை குடித்து வருவதால், எனக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.