மும்பை: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதி திரட்டும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கேட்டோ என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் 7 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில் அவர்கள் ரூ.2 கோடி நிதி வழங்கி உள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் 3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.