உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப்பணிகள் தொடங்கியது: சிறப்பு அதிகாரி ஷில்பா சதீஸ் பிரபாகர் தகவல்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப்பணிகள் தொடங்கியுள்ளதாக அத்திட்டத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா சதீஸ் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்று 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அவர் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்திற்கு சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா சதீஸ் பிரபாகரை நியமித்தார். இதனிடையே இத்திட்டத்தில் மொத்தம் 6 லட்சம் மனுக்கள் வந்துள்ளதாகவும் முதலில் அவற்றை கணினியில் ஏற்றி பின்னர் வகை பிரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி தீர்வு காணப்படும் என்றும் ஷில்பா சதீஸ் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: