மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் ‘மாட்ரிட் மகளிர் ஒபன் டென்னில் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று ஆஷ்லி பார்தி-அர்யனா சபாலங்கா மோத உள்ளனர்.உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்தி(ஆஸ்திரலேியா) அரையிறுதி ஆட்டத்தில் பவுலா படோசா(ஸ்பெயின்)வை 6-4-6-3 என நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஆஷ்லி தான் கடைசியாக மோதிய 9 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றிப் பெற்றுள்ளார். கடைசியாக அவர் சார்லெஸ்டன் ஓபன் காலிறுதியில் பவுலா படோசாவிடம் 6-4, 6-3 என நேர் செட்களில் தோற்றார். அதே போல் உலகின் 7ம் நிலை வீராங்கனையான அர்யனா சபாலங்கா(பெலாரஸ்) அரையிறுதி ஆட்டத்தில் அனஸ்டசியா பவ்லிசெகோவை 6-2. 6-3 என நேர்செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். அர்யனா தான் விளையாடிய கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ந்து வென்றுள்ளார். அவர் கடைசியாக ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் இறுதியாட்டத்தில் ஆஷ்லி பார்தியிடம் 3-6, 6-0, 6-3 என்ற செட்களில் போராடி தோற்றார்.