சாயல்குடி : கடலாடியில் இன்றும், சாயல்குடியில் நாளையும் வாரச்சந்தை நடக்காது என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது
வாரந்தோறும் கடலாடியில் வெள்ளிக்கிழமையும், சாயல்குடியில் சனிக்கிழமையும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். கடலாடியில் ஒருவனேந்தல், ஆப்பனூர், ஆ.புனவாசல், மீனங்குடி, சாத்தங்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமமக்களும், சாயல்குடியில் எம்.கரிசல்குளம், கன்னிராஜபுரம், கீழச்செல்வனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் வந்து காய்கறி, பழங்கள், பலசரக்கு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்வர். இதனால் சந்தை அன்று மட்டும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படும். பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நெருக்கமாக நின்று வாங்கிச் செல்வர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.