சென்னை : தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கடந்த 1975ம் ஆண்டு ’மாணவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் சிவாஜி ,கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.கேப்பிடல் லேட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர்.அதிமுக கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்துள்ளார். அத்துடன் பல திரையுலக பிரபலங்களின் இல்லம், நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்தவர் பாண்டு.