லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. யோகிக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மாநில போலீசின் வாட்ஸ்அப் எமர்ஜென்சி எண் `112’க்கு கடந்த 29ம் தேதி இந்த கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றது” என அடையாளம் தெரியாத நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.