இந்தியா 'கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' !: நடிகர் சோனு சூட் வேதனை பதிவு..!! May 04, 2021 சோனு சூத் டெல்லி: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை உச்சமடைந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைகின்றனர். பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் வருத்தம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் நடிகர் சோனு சூட். தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் வெளியேற விரும்புகிறார்கள். மருத்துவமனைகளுக்கு வெளியே நிற்கும் மக்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் இருந்து படுக்கைகள், ஆக்சிஜனுக்கான கோரிக்கை அதிகமாக வருவதாக சோனு சூட் கூறியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப உதவிய நடிகர் சோனு சூட், தற்போது இரண்டாம் அலையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் சிலிண்டரும் ஏற்பாடு செய்து கொடுத்து கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!