இந்தியா டெல்லியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 மாத ரேஷன் இலவசம்!: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!! May 04, 2021 தில்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: டெல்லியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் பொருள் 2 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் 72 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!