புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்து பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசவுட் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திரா பட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘ரெம்டெசிவிர், ஆக்சிஜன் போன்ற அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் விலை அதிகமாகவும், கள்ள சந்தைகளிலும் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. பொதுமக்கள் துயரத்தில் இருக்கும்போது, அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.