ரூ.10 செலுத்தினால் கையில் கிடைக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம்

கரூர், ஏப்.4: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை இணைந்து வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரத்தினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்.

அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தானியங்கி மூலம் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி இயந்திரத்தில் ரூ.10 நாணயமாகவோ அல்லது 10 ரூபாய் நோட்டாகவோ செலுத்தினால் மஞ்சள் பை கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம் அலுவலர் ஜெயலெட்சுமி, தமிழ்நாடு காகித ஆலை துணை பொது மேலாளர் ரவி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.10 செலுத்தினால் கையில் கிடைக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: