ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை இந்த விருந்தினர் இல்லத்துக்கு அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்கச் செய்தனர். விருந்தினர் இல்லத்தில் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அருகில் உள்ள பல கட்டிடங்களில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.