பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92). கணவர் இறந்து விட்டார். 2 மகன்களும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். காளிமுத்தம்மாள் தனது வீட்டருகே உள்ள தென்னந்தோப்புக்கு தினமும் சென்று வருவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம்போல் தென்னந்தோப்பிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரது வாயை பொத்தி அருகில் உள்ள மோட்டார் அறைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை தாக்கி, நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டினர். அதற்கு காளியம்மாள் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரது தலையை பிடித்து சுவற்றில் சரமாரியாக முட்ட வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 18 பவுன் நகைகளை கழற்றினர். தோடுகளை கழற்ற முடியாததால் அவரது காதோடு அறுத்து கழற்றி சென்றனர்.