கேரளாவில் நிலம்பூர் தொகுதி காங். வேட்பாளர் திடீர் மரணம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பிரகாஷ் (56). இம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிலம்பூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பிரகாஷ் இறந்தார். அவரது உடல் நேற்று மாலை   எடக்கரையில் உள்ள வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பிரகாசின் மரணத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் முதல்வர்கள் ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: