இந்தியா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொணடதாக தகவல் Apr 28, 2021 அல்லு அர்ஜுன் ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!