அகமதாபாத்: ஐபிஎல்2021 டி20 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.