சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் உலோகத்தினாலான கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் உள்ள படித்துறையில் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, வாய்க்கால் தண்ணீருக்குள் சிலை இருந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக அப்பகுதியில் உள்ள வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த அக்கரை தத்தப்பள்ளி விஏஓ சிலம்பரசன், கிராம உதவியாளர் சக்திவேல் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கியிருந்த சிலையை எடுத்து பார்த்தனர். அப்போது, அது சுமார் ஒன்றரை அடி முதல் 2 அடி உயரமுள்ள உலோகத்திலான கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது.