ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மஞ்சங்காரணை, கூரம்பாக்கம் மற்றும் காடாநல்லூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலை சம்மந்தமாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மஞ்சங்காரணை பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும்பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்துதான் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில், மேற்கூரை உடைந்துவிட்டதால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் காத்துக்கிடக்கின்றனர். மழை வரும்போது பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நனைகின்றனர்.