திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைமை பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் போதுமான இட வசதி இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து புதிய பஸ் நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் பூண்டி ஊராட்சி ஒன்றியம், சிறுவானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பஸ் நிலையம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிலம் ஒதுக்கப்பட்டது.