திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 5ம் தேதி பந்தக்கால் முகூர்த்த விழா துவக்கப்பட்டது. இக்கோயில் மண்டகபடிதாரர்கள் பூஜைகள் மட்டும் செய்து சுவாமி புறப்பாடு இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (23ம்தேதி) தேரோட்டம் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற இருந்தது.