விருதுநகர்: மாவட்டத்தில் சாலையோரங்களில் பரவி கிடக்கும் சருகுகளுக்கு சமூக விரோதிகள் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் சாலையோர மரங்கள் தீக்கிரையாவதை தடுக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.மாவட்டத்தில் சாலையோர தரிசு நிலங்கள் முதல் அனைத்து இடங்களிலும் புற்கள் கொளுத்தும் வெயிலில் சருகாகி கிடக்கின்றன. காய்ந்து கிடக்கும் சருகுகளுக்கு சமூக விரோதிகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டாக தீ வைத்து விடுகின்றனர். சருகுகளுக்கு வைக்கப்படும் கொளுத்தும் வெயிலுக்கு தீயில் சாலையோரங்களில் இருக்கும் மரங்கள், தரிசு நிலங்களில் இருக்கும் மரங்களும் கருகி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக சருகளால் கருகும் மரங்களை காப்பாற்ற முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் தீ வைப்பு சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வாட்டி வதைத்த வெயிலில் மீண்டும் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.