மதுரை: தமிழகத்தையும், புதுச்சேரியையும் மத்திய பாஜக அரசு காவு கொடுக்க துடிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற கட்சி தொண்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மத வெறியையும், சாதி வெறியையும் தூண்டி மக்களை கூறு போடும் நிகழ்வுகளை பாஜக அரசு நிகழ்த்துவதாக விமர்சித்துள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட செய்திருப்பதாகவும், நாட்டு மக்களை காப்பாற்ற பாஜக அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.