புதுடெல்லி: மத்திய அரசு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஊழல் பிரச்னைக்கு தீர்வு காண, எந்தவொரு அதிகார இடையூறும் இல்லாத அமைப்பாக 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு துறை அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக அப்படியே கிடப்பில் போடப்படுகிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுவது இல்லை.