டெல்லி: டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து 188 பயணிகள் ஒரு விமானத்தில் ஹாங்காங் சென்றனர். ஹாங்காங் சட்ட விதிகளின் படி அனைத்து பயணிகளும் புறப்படும் தேதிக்கு முன்னதாக 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது.