ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

மும்பை: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக டுபிலிஸிஸ் 33, கைக்வாட் 10, மொத்தீன் அலி 26, ரெய்னா 18, ராயுடு 27, ஜடேஜா 8, தோனி 18, சாம் கர்ரன் 13, பிராவோ 20 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சேட்டன் சக்கரியா 3 விக்கெட், ரஹ்மான் 1, மோரிஸ் 2, ராகுல் டிவடியா 1 விக்கெட் வீழ்த்தினர். 189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: