டெல்லி: டெல்லியில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் ஏறக்குறைய 24,000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நவம்பரில் 4,100 படுகைகளை வழங்கிய மத்திய அரசு தற்போது 1,800 படுக்கைகள் மட்டுமே வழங்கியுள்ளது. டெல்லியில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.